search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபை கூட்டம்"

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1159 கிராமங்களில், கிராமசபை கூட்டம் அந்தந்த தலைவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடந்தது. இதில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    வில்லிவாக்கம் ஒன்றியம் பாண்டீஸ்வரன் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார். அவர் பொது மக்களிடம் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    • பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விளைநிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கு அதை சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.

    பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • விருதுநகர் மாவட்டத்தில் 22-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவா தித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    எனவே வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
    • இன்று ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியின் பெயரை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறி மேட்டூர் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கிராமசபை கூட்டம்

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிராமசபைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக குவிக்கப்பட்டனர்.இதற்கிடையே சிறப்பு கிராமசபை கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று (17-ந் தேதி) கடையம்பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் இன்றும் கிராமசபைக்கூட்டத்தை 2- வது முறையாக மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ரத்து செய்து உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஏர்வாடியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
    • தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வத்துரை அனைவரையும் வரவேற்றார். கடலாடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டார். ஏர்வாடி ஊரக வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி கிராம ஊராட்சி திட்டம் உறுதி செய்யபட்டன. உலக தண்ணீர் தின சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    ஊராட்சித்தலைவர் செய்யது அப்பாஸ் பேசும்போது, பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும், ஏர்வாடியை தூய்மை நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,நெகிழி பயன்படுத்தாமல் மஞ்சள் பை உபயோகப்படுத்த வேண்டும், தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • வாடிப்பட்டி யூனியனில் குடியரசு தின கிராமசபை கூட்டம் நடந்தது.
    • வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லா டம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம் பகுதிகளில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள் நடந்தன. கச்சைகட்டியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். சிறப்புஅழைப்பாளர்களாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விராலிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் காளியம்மாள் தலைமையில் துணைத்தலைவர் மணிகண்டன், பற்றாளர் சரோஜா, ஊராட்சி செயலாளர் செந்தாமரை முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செம்மினிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் தெய்வதர்மர் தலைமையில் துணைத்தலைவர் பஞ்சு, பற்றாளர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்சரஸ்வதி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    குட்லாடம்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிமீனா தலைமையில் துணைத்தலைவர் கதிரவன், பற்றாளர் மலர்மன்னன், ஊராட்சிசெயலாளர் தனலட்சுமி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ராமயன்பட்டியில் ஊராட்சிமன்றதலைவர் குருமூர்த்தி தலைமையில் துணைத்தலைவர் ராஜலட்சுமி, பற்றாளர் கவிதா, ஊராட்சிசெயலாளர் மகாராஜன் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பூச்சம்பட்டியில் தலைவர் சாந்தி தலைமையில் துணைத் தலைவர் லதா, பற்றாளர் சங்கர், ஊரட்சிசெயலாளர் செல்வம்முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம நி ர்வாக அலுவலர்கள், வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ஆற்காடு ஒன்றியம் மாங்காடு ஊராட்சியில் 74வது குடியரசுதினத்தை யொட்டிநடைபெற்ற கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கண்ணகி தலைமையில் நேற்று நடைபெற்றது

    ராணிப்பேட்டை கோட்டாச்சியர் வினோத்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சி) குமாா், ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சி க்குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு தாசில்தார் செ.ரவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்பிரபாகரன், அண்ணாமலை, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் சரன்ராஜ், கஜபதி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் 74-வது குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரி க்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார். தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். கோரவள்ளியில் கலை யரங்கம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளி த்தார்.

    மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சண்முக நாதன், கோரவள்ளி ஊராட்சி தலைவர் கோகிலவாணி சிவஞானம் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஜே.பிரவின் ஏற்பாட்டில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரெட்டையூரணியில் புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார்.

    காரான், வழுதூர், வாலாந்தரவை, சாத்தான் குளம் ஆகிய இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். அப்போது 500-க்கும் அதிகமான பொதுமக்களுக்கு வேட்டி,சேலை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், வாலாந்தரவை ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
    • மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வினீத் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும் போது அந்த ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.

    இது போன்ற கிராமசபை கூட்டத்தில் திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தை கடைபிடித்தல், வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்.

    ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. குழுக்கள் மிகவும் குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.

    ஒரு குழுக்களுக்கு 12 நபர்கள் இருந்தால் போதும். அவ்வாறு குழுக்கள் அமைக்கும் போது ரூ.1 லட்சம் முதல் கடனாக வழங்கப்படுகிறது. இன்றைய தினம், குழுக்களுக்கு ரூ.49 லட்சம் வரையிலும் கடனாக குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் தொடங்கி சிறப்பாக செயல்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகள் சான்று விண்ணப்பித்து அரசின் சலுகைகளை விவசாயிகள் பெறலாம். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக்கல்வி உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் 4 குழந்தைகள் பள்ளிக்கு வருகை தராமல் இருப்பதாக தெரிகின்றது.

    பள்ளி மேலாண்மை குழு மூலம் அவர்களை பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் கோப்பை நடைபெற்று வருகிறது. அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சி மன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

    அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக, 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி, தொழு நோய் மூலம் பதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 2 நபர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.

    தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மாரியப்பன், சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குடியரசு தினத்தை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது.

    பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்.கலெக்டர் அரவிந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சனை, உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

    கூட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்,திடக்கழிவு மேலாண்மை திட்டம் உட்பட பல்வேறு திட்ட பணி கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் அரவிந்த் கூறுகையில்:- குமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.

    பறக்கை ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் தனிநபர் உறிஞ்சி குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.நமது மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். எனவே பொதுமக்கள் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டாமல் அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் போட வேண்டும்.இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா ஆர்டிஓ சேதுராமலிங்கம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை விளார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது.
    • இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஊராட்சி ஒன்றியம் விளார் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் மைதிலி ரெத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்தும், தூய்மை பணிகள் மேற்கொள்வது, சுத்தமான குடிநீர் வழங்குவது, 100 நாள் வேலை திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர் . அதனை சரி செய்வது தருவதாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2022 முதல் 31.12.2022 முடிய) குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை டிசம்பர் 31-ந் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல்,

    தற்போது உள்ள பணி தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2022-23-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றநிலை குறித்து விவாதித்தல், 2023-24-ம் ஆண்டில் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்தல் குறித்து விவாதித்தல்,

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடுகணக்கெடுப்பு பணி, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்குதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டாரஅளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சிஅளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×